சென்னை, மும்பை உள்ளிட்ட பெரு நகரங்களில் 20 ஆண்டுகளுக்கு முன்பு, டபுள் டெக்கர் பஸ்கள் இயக்கப்பட்டன. ஆனால் 2008ஆம் ஆண்டிற்கு பின்னர் பல்வேறு காரணங்களால் நிறுத்தப்பட்டு விட்டது.
இந்நிலையில், சில இடங்களில் மீண்டும் டபுள் டெக்கர் பேருந்துகளை இயக்க சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது. இதற்காக தேசிய தூய காற்று திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 20 எலக்ட்ரிக் பேருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
மின்சார டபுள் டக்கர் பேருந்துகளை வார நாட்களில் பயணிகள் நடமாட்டம் அதிகம் உள்ள அண்ணா சாலை, காமராஜர் சாலை, ECR உள்ளிட்ட வழித்தடங்களில் இயக்கவும், வார இறுதி மற்றும் விடுமுறை நாட்களில் சுற்றுலாவுக்கு பயன்படுத்தவும் சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.


