சென்னை மெட்ரோ ரயில் (CMRL) நிறுவனம், MRTS மின்சார ரயில் சேவைகளை முழுமையாகக் கையகப்படுத்துவது தொடர்பான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் இறுதி செய்யப்பட்டுள்ளன. மத்திய ரயில்வே துறை நேற்று இதற்கு ஒப்புதல் அளித்தது. இதையடுத்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சென்னை மின்சார ரயில் சேவையை இனி கட்டுப்படுத்த உள்ளது.இதற்காக நேற்று மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் நிலம், உள்கட்டமைப்பு, ரயில் பெட்டிகள் மற்றும் ஊழியர் பயிற்சி உள்ளிட்ட முக்கிய அம்சங்களை உள்ளடக்கியுள்ளது. MRTS பயன்பாட்டில் உள்ள தமிழ்நாடு அரசுக்குச் சொந்தமான நிலங்கள், மீண்டும் தமிழக அரசிடமே ஒப்படைக்கப்படும். மேலும், தெற்கு ரயில்வேக்கு (SR) சொந்தமான நிலங்கள், தமிழக அரசுக்கு குத்தகைக்கு விடப்படும் என ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதுள்ள தண்டவாளங்கள், பாலங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்புகள், தேய்மான மதிப்புடன் தமிழக அரசுக்கு மாற்றப்படும். தமிழக அரசால் நிதி அளிக்கப்பட்டு வாங்கப்பட்ட மின்சார ரயில் பெட்டிகள் (EMU) உள்ளபடியே தமிழக அரசுக்கு மாற்றப்படும். தெற்கு ரயில்வேக்குச் சொந்தமான EMU ரயில் பெட்டிகளை, தமிழக அரசு இரண்டு ஆண்டுகளுக்கு இலவசமாகப் பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த காலக்கெடுவுக்குப் பிறகு, அந்தப் பெட்டிகள் தெற்கு ரயில்வேக்குத் திரும்ப ஒப்படைக்கப்படும் அல்லது தமிழக அரசு அவற்றின் தேய்மான மதிப்பைக் கொடுத்துப் பெற்றுக்கொள்ளலாம்
இந்தக் கையகப்படுத்தும் நடவடிக்கைக்குத் தேவைப்படும் இரு வருட இடைக்காலப் பயிற்சி காலகட்டத்தில், தெற்கு ரயில்வே தனது ஊழியர்களை இலவசமாகப் பணியமர்த்தி CMRL ஊழியர்களுக்குப் பயிற்சி அளிக்கும். இந்த நேரத்தில், CMRL தனது சொந்த ஊழியர்களைப் புதிதாக நியமித்து பயிற்சி அளிக்க வேண்டும்.
இரண்டு ஆண்டுகளுக்குள் கையகப்படுத்தும் செயல்முறை நிறைவடையவில்லை என்றால், தெற்கு ரயில்வே தனது செயல்பாடுகளுக்கு தமிழக அரசிடம் கட்டணம் வசூலிக்க உரிமை உண்டு. சென்னை கடற்கரை மற்றும் கோட்டை ரயில் நிலையங்கள் போன்ற பொதுப் பயன்பாட்டு உள்கட்டமைப்புகளின் பயன்பாடு மற்றும் அதற்கான கட்டணங்கள் குறித்து தெற்கு ரயில்வே மற்றும் தமிழக அரசு இணைந்து ஒரு குழு அமைத்து முடிவு செய்யும்.
மெட்ரோ உடன் இணையும் சென்னை பறக்கும் ரயில்
நீண்ட தாமதத்திற்குப் பிறகு இந்த இணைப்பிற்கு மத்திய ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தது. சென்னை கடற்கரை முதல் வேளச்சேரி MRTS வழித்தடம் வரை அனைத்தும் CMRL வசம் வரும். புரிந்துணர்வு ஒப்பந்தம் அரசுடன் இன்னும் கையெழுத்து ஆகவில்லை. இருப்பினும், CMRL நிலையப் பணிகளைத் தொடங்கியது. இது பயணிகளின் வசதிக்காக மேற்கொள்ளப்படுகிறது. மறுசீரமைப்புப் பணிகள் அடுத்த ஆறு மாதங்களுக்குள் தொடங்கும். CMRL அதிகாரிகள் இதைத் தெரிவித்தனர். பாதுகாப்புப் பணியாளர்களை நியமிக்க திட்டம் உள்ளது. மேலும், பராமரிப்பு மேம்பாட்டுக்கான திட்டங்களையும் வகுக்கிறது. நிலைய உள்கட்டமைப்பு ஆய்வுக்கு ஆலோசகர் நியமிக்கப்படுவார். CMRL விரிவான ஆய்வு நடத்த திட்டமிட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தப்புள்ளி விரைவில் வெளியிடப்படும். இது தொடர்பாக மெட்ரோ நிர்வாகம், ஆலோசகரைத் தேர்வு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகும் வரை காத்திருக்க விரும்பவில்லை. இந்த நேரத்தில், நிலையங்களை எப்படி மேம்படுத்துவது என்பது குறித்த ஆய்வறிக்கையை தயாராக வைத்திருக்க முடியும். இந்த வார இறுதியிலோ அல்லது அடுத்த வாரத் தொடக்கத்திலோ இதற்கான ஒப்பந்தப்புள்ளி வெளியிடப்படும். புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு, மூன்று மாதங்களுக்குள் ஆலோசகரிடமிருந்து ஆரம்ப அறிக்கை கிடைக்கும், என்று தெரிவித்து உள்ளது


