சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் அதிகாரியிடம் இன்று (ஏப். 2) வேட்புமனு தாக்கல் செய்தார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்.23-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இந்நிலையில், தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 30-ம் தேதி தொடங்கியது. வருகிற 6-ம் தேதி வேட்புமனு தாக்கலுக்கு கடைசி நாளாகும். அன்று மதியம் 3 மணி வரை வேட்பு மனுக்கள் பெறப்படவிருக்கிறது. இதனிடையே திமுக, அதிமுக, தவெக மற்றும் நாதக ஆகிய கட்சி நிர்வாகிகள் தீவிரமாக களத்தில் செயலாற்றி வருகிறார்கள்.
இந்நிலையில். திமுக சார்பில் 2-வது முறையாக சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் அதிகாரியிடம் இன்று (ஏப். 2) வேட்புமனு தாக்கல் செய்தார் . சேப்பாக்கத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் சுகந்தியிடம், அவர் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.


