கி.பி. 1303-ம் ஆண்டு சித்தூர்கரை (ராஜஸ்தான்) டெல்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜி தாக்க வரும்போது, ராணி பத்மினி அண்டை நாட்டு மன்னர்களுக்கு ராக்கி கயிறு அனுப்பி போரை நிறுத்தியதாக சரித்திரக் குறிப்புகள் உள்ளன.
புராணங்களின்படி கிருஷ்ண பகவானின் கையில் காயம் ஏற்பட்டபோது, பாண்டவர்களின் மனைவியான திரவுபதி தனது சேலையின் ஒரு பகுதியைக் கிழித்து காயம்பட்ட மணிக்கட்டில் கட்டினார். திரவுபதி வெளிப்படுத்திய அன்பின் காரணமாக திரவுபதியை எப்போதும் பாதுகாப்பேன் என கிருஷ்ணர் உறுதியளிக்கிறார். அஸ்தினாபுரம் அரசவையில் கவுரவர்கள் திரவுபதியின் ஆடையை அவிழ்த்து அவமானப்படுத்த முயன்றபோது கிருஷ்ணர் அதை தடுத்து தனது வாக்குறுதியை நிறைவேற்றினார். கிருஷ்ணரின் கையில் திரவுபதி தன் புடவையை கிழித்து கட்டிய நிகழ்வே இன்று ரக்சா பந்தன் விழாவாக கொண்டாடப்படுகிறது.
ரக்சா பந்தன் தொடர்புடைய மற்றொரு புராணக்கதையும் சொல்லப்படுகிறது. இதன்படி, ரக்ஷா பந்தன் கொண்டாட்டம் இந்திராணி தேவி மற்றும் இந்திர கடவுளுடன் தொடர்புடையதாகும். இது புனிதமான கயிற்றின் சக்தியை விவரிக்கிறது. கொடூரமான அரக்கர்களின் சவாலை ஏற்று இந்திரர் போர்க்களம் செல்கிறார். அரக்கர்களின் சக்திக்கு ஈடு கொடுக்க முடியாது எனத் தெரிந்த நிலையில் இந்திராணி தேவி இந்திரரின் கையில் ரக்ஷா எனும் புனித கயிற்றை கட்டுகிறார். இதன் விளைவாக அரக்கர்களை போரிலும் வீழ்த்துகிறார்.
இப்போது தான் காதலிக்க விரும்பாத அல்லது தனக்கு பிரச்னை ஏற்படுத்தும் ஆண்களுக்கு இளம் பெண்கள் ராக்கி கட்டி குழப்பத்தை அல்லது பிரச்னையை சமாளிப்பது சகஜமாகி விட்டது..
அந்த ராக்கி கட்டும் ரக்சா பந்தன் என்பது நிகழ்ச்சியை இம்மாதத்தின் பவுர்ணமி நாளில் கொண்டாடப்படும். இந்நாளில் பெண்கள் தமது உடன் பிறந்த சகோதரர்கள் மற்றும் சகோதரர்களாகக் கருதுவோரின் மணிக்கட்டில் மஞ்சள் நூல் (ராக்கி) கட்டுவது முக்கிய நிகழ்ச்சி. இதனை ஏற்றுக்கொள்வதன் மூலம் ஓர் ஆண், அந்தச் சகோதரியின் பாதுகாப்பிற்கும், வாழ்க்கை நலத்திற்கும் உறுதுணையாக இருப்பேன் என்று உறுதி கூறுவதாகக் கருதப்படுகிறது.
ராக்கி கட்டியவுடன் சகோதரன், அந்த அன்புச் சகோதரிக்கு பரிசு அல்லது பணம் அளிப்பதும் வழக்கம்.
பல ஆண்டுகளாக வடஇந்தியாவில் பிரபலமாக இருந்த இந்த Raksha Bandhan நிகழ்ச்சி தற்போது தென்னிந்தியாவிலும் பிரபலமாகி வருது


