இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஓவலில் நடைபெற்றது.
இரண்டாவது இன்னிங்ஸில் 374 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணி 367 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இதன் மூலம், இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது. ஒரு மணி நேரத்தில் போட்டி இந்தியாவுக்கு சாதகமாக மாறியது. குறைந்த ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்ற டெஸ்ட் போட்டி என்கிற சாதனையும் இதன் மூலம் முறியடிக்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் ஐந்து டெஸ்ட் போட்டிகளும் கடைசி நாள் வரை சென்று முடிந்துள்ளன.
நான்காவது இன்னிங்ஸில் 374 ரன்கள் என்கிற இமலாய இலக்கை துரத்திய இங்கிலாந்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது.
இரண்டாவது இன்னிங்ஸில் ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்திய சிராஜ் இந்த டெஸ்ட் போட்டியில் மொத்தம் 9 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். சிராஜுக்கு உறுதுணையாக பிரசித் கிருஷ்ணாவும் இரு இன்னிங்ஸிலும் தலா 4 விக்கெட்டுகள் என மொத்தம் எட்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். 4வது நாளில் கேட்சை தவறவிட்டதற்காக விமர்சிக்கப்பட்ட சிராஜ். இன்று முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி சாதித்தார்.
ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் தனது சிறப்பான பந்துவீச்சுக்காக முகமது சிராஜ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்திய அணிக்கு கேப்டன் ஷுப்மன் கில்லும் இங்கிலாந்து அணிக்கு பேட்டர் ஹாரி ப்ரூக்கும் தொடர் நாயகர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.
இதன் மூலம் இந்த தொடரை 2-2 என்கிற கணிக்கில் இந்திய அணி சமன் செய்துள்ளது. நான்காவது நாள் முடியும் வரை ஒருதலைபட்சமாக இருந்தபோட்டி இந்தியாவின் அபார பந்துவீச்சால் வெற்றியாக மாறியது.


