உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 3 ஆண்டுகளாக போர் புரிந்து வருகிறது. இந்த போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முயன்று வருகிறார். உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியிடம் நேரடியாகவும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் தொலைபேசி வழியாகவும் டிரம்ப் பேசினார். பலமுறை பேசிய நிலையில் ஆகஸ்ட் 15ல் இருவரும் நேரில் சந்தித்து பேச உள்ளனர்.
அதுமட்டுமின்றி ரஷ்ய நாட்டின் பிரதிநிதிகளுடன், அமெரிக்கா நாட்டின் பிரதிநிதிகள் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் இந்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. இதனால் உக்ரைன் – ரஷ்யா போர் தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில் தான் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் நேரில் சந்தித்து பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகின. தற்போது அது உறுதி செய்யப்பட்டுள்ளது. விளாடிமிர் புதின் – டிரம்ப் ஆகியோர் வரும் 15ம் தேதி நேரில் சந்தித்த பேச உள்ளனர். இதனை டொனால்ட் டிரம்ப் உறுதி செய்துள்ளார். இதுபற்றி டொனால்ட் டிரம்ப் தனது ட்ரூத் வலைதள பக்கத்தில், ‛‛அமெரிக்க அதிபரான எனக்கும், ரஷ்ய அதிபராரான புதின் இடையேயான பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சந்திப்பு அடுத்த வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 15) அலஸ்காவில் நடைபெற உள்ளது. பிற விவரங்கள் அடுத்தடுத்து தெரிவிக்கப்படும். இதுபற்றிய உங்களின் கவனத்துக்கு நன்றி” என்று தெரிவித்துள்ளார்.


